கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டி போகும் மழையைப் போல
அழகாலே என்னை விரட்டி
இது தான் காதல் என்றாளே
தெருமுனையை தாண்டும் வரையில்
வெறுநாள் தான் நின்றிருந்தேன்
தேவதையைப் பார்த்ததும்
இன்று திருநாள் என்கின்றேன்
அழகான திமிற்றில்
அய்யோ நான் மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க வழிகள் இருந்தும்
வேண்டாம் என்றேன்
ஒஹோ ஒஹோ ஹோ….ஹோ….
ஒஹோ ஒஹோ ஹோ….ஹோ….
ஒஹோ ஒஹோ ஹோ….ஹோ….
உன் பேரும் தெரியாதே
என் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு
பேர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்க்கிறேன்
நதியில் விழும் பிம்பத்தை
நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோர் உயிரை
சுமக்கின்றேன் காதல் இதுவா
இதயத்தில் மலையின் கதையை
உணர்கின்றேன் காதல் இதுவா
கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
வீதியுலா நீயும் வந்தால்
தெருவிளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சூரியனும்
அடம் பிடிக்குமே
நதியோடு நீ குளித்தால்
மீனுக்கு காய்ச்சல் வரும்
உன்னைத் தொட்டு பார்க்கத்தான்
மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட….
ஓ… பதராத நெஞ்சம் எனது
ஓ……பூ ஒன்று மோதியதாலே
ஓ…ஒ… பட்டென்று சரிந்தது இன்று
கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பார்த்து
கொட்டி போகும் மழையைப் போல
அழகாலே என்னை விரட்டி
இது தான் காதல் என்றாளே
ஒஹோ ஒஹோ ஹோ….ஹோ….
ஒஹோ ஒஹோ ஹோ….ஹோ….ஓயியே
ஒஹோ ஒஹோ ஹோ….ஹோ….
ஒஹோ ஒஹோ ஹோ….ஹோ….
ஒஹோ ஒஹோ ஹோ….ஹோ…